சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்by பானுஷபானா Yesterday at 15:12
» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Mon 23 Apr 2018 - 11:32
» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Mon 23 Apr 2018 - 11:31
» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Mon 23 Apr 2018 - 11:29
» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Mon 23 Apr 2018 - 11:28
» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:27
» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:25
» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:24
» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:23
» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:21
» சினி துளிகள்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:20
» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:19
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 15:29
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 14:31
» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29
» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52
» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49
» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12
» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25
» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24
» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46
» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53
» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18
» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37
» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27
» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25
» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46
» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45
» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41
» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38
» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37
» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35
» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34
» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34
» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33
.
துதிபாடும் மன்றமான சட்டப்பேரவை: ஸ்டாலின் விமர்சனம்
துதிபாடும் மன்றமான சட்டப்பேரவை: ஸ்டாலின் விமர்சனம்
துதிபாடும் மன்றமான சட்டப்பேரவை: ஸ்டாலின் விமர்சனம்
-
ஆளுங்கட்சியின் அமைச்சர்கள், வரலாற்றுப் பெருமைமிக்க
தமிழக சட்டப்பேரவையை துதிபாடும் மன்றமாக மாற்றி,
இந்தக் கூட்டத் தொடரை நிறைவு செய்துள்ளனர் என தமிழக
எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல்தலைவருமான
மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
அதேவேளையில், திமுக எப்போதும் ஜனநாயக மரபுகளை
மதித்து சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படும் என அவர்
கூறியிருக்கிறார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து விமர்சித்து
திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.
அதில், அவர் இவ்வாறெல்லாம் குறிப்பிட்டிருக்கிறார்.
கடிதம் விவரம்:
-
"23-01-2017 அன்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டமன்றக்
கூட்டத் தொடரில் பொறுப்புள்ள ஜனநாயக ரீதியிலான எதிர்க்
கட்சியாக திமுக தனது செயல்பாடுகளை முன்வைத்தது.
ஜல்லிக்கட்டு அனுமதிக்கான தமிழக அரசின் சட்டம், நீட்
தேர்விலிருந்து விலக்களிக்க வகை செய்யும் மசோதா எனத் தமிழக
நலன்களையும் உரிமைகளையும் பாதுகாப்பதற்காக ஆட்சியாளர்கள்
எடுத்த முயற்சிகள் முழுமையானதா உளப்பூர்வமானதா என்பதைக்
கடந்து, மாநிலத்தின் நலன் கருதி தி.மு.கழகம் அவற்றை முழுமனதாக
ஆதரித்து, இந்த இயக்கம் எப்போதும் தமிழர்களின் பக்கம் இருந்து
பாதுகாக்கும் என்பதை உணர்த்தும்.
-
அதேநேரத்தில், ஆளுங்கட்சியின் குறைபாடுகளை, நிறைவேற்றாத
வாக்குறுதிகளை, மக்கள் விரோத, ஜனநாயகத்திற்கு எதிரான
நடவடிக்கைகளை எடுத்துக்கூறவும் தயங்கவில்லை.
ஆனால், அதற்கு சட்டப்பேரவைத் தலைவர் முழுமையான வாய்ப்புகளை
வழங்காமல், ஆளுங்கட்சியினரின் துதிபாடும் பேச்சுகளுக்கே அதிக
நேரத்தை ஒதுக்கித் தந்தார். அதிலும் ஆளுங்கட்சியினருக்கு வழங்கப்படும்
உரிமைகள் எதிர்க்கட்சியினருக்கு மறுக்கப்பட்டன.
முன்பு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அவரும் அவரது
அமைச்சரவையினரும் ஆளுங்கட்சி உறுப்பினர்களும் தமிழகத்தை
அதிக காலம் ஆட்சி செய்த முதல்வரான கருணாநிதியின் பெயர்
சொல்லி பல முறை பேசியிருக்கிறார்.
முன்னாள் முதல்வர்கள் பலர் இருப்பதால் இப்படிப் பெயர் சொல்லிக்
குறிப்பிடலாம் என சபாநாயகரும் அதற்கு அனுமதியளித்தார்.
இப்போது அதே வழியில், முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவின்
பெயரை நமது கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டபோது,
அதற்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
முன்னர் கடைப்பிடித்த நடைமுறைகளை நாம் சுட்டிக்காட்டிய போதும்
பேரவைத் தலைவர் சமாதானமடையவில்லை. நாளுக்கொரு விதி
ஆளுக்கொரு விதி முன்னாள் முதல்வர் கொடுத்த வாக்குறுதிகள்,
அறிவித்த திட்டங்கள், நடத்திய உலக முதலீட்டாளர் மாநாடு
உள்ளிட்டவை எந்தளவில் செயல்பாட்டில் உள்ளன என்பதையும்
மக்களுக்கு என்ன பலன் கிடைத்தது என்பதையும் தான் கழகத்தினர்
கேள்விகளாக எழுப்பினர்.
இந்தக் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்க முடியாத ஆளுங்கட்சியின்
அமைச்சர்கள், வரலாற்றுப் பெருமைமிக்க தமிழக சட்டமன்றத்தை
துதிபாடும் மன்றமாக மாற்றி, இந்தக் கூட்டத் தொடரை நிறைவு
செய்துள்ளனர்.
வர்தா புயலால் சென்னை மாநகரம் கடும் பாதிப்புக்குள்ளான நிலையில்,
அப்போது வீழ்ந்த மரங்களின் கழிவுகளை மாநகராட்சியின் பூங்காக்கள்-
விளையாட்டு திடல்கள் ஆகியவற்றில் கொட்டி வைத்திருப்பதை எப்போது
அகற்றி, மக்களுக்கும் இளைஞர்களுக்கும் அந்த இடங்கள் பயன்படும்படி
செய்யப் போகிறீர்கள் என்ற கேள்வியை எதிர்க்கட்சித் தலைவர் என்ற
முறையில் சட்டமன்றத்தில் எழுப்பினேன்.
-
ஆளுங்கட்சியின் அமைச்சர்கள், வரலாற்றுப் பெருமைமிக்க
தமிழக சட்டப்பேரவையை துதிபாடும் மன்றமாக மாற்றி,
இந்தக் கூட்டத் தொடரை நிறைவு செய்துள்ளனர் என தமிழக
எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல்தலைவருமான
மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
அதேவேளையில், திமுக எப்போதும் ஜனநாயக மரபுகளை
மதித்து சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படும் என அவர்
கூறியிருக்கிறார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து விமர்சித்து
திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.
அதில், அவர் இவ்வாறெல்லாம் குறிப்பிட்டிருக்கிறார்.
கடிதம் விவரம்:
-
"23-01-2017 அன்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டமன்றக்
கூட்டத் தொடரில் பொறுப்புள்ள ஜனநாயக ரீதியிலான எதிர்க்
கட்சியாக திமுக தனது செயல்பாடுகளை முன்வைத்தது.
ஜல்லிக்கட்டு அனுமதிக்கான தமிழக அரசின் சட்டம், நீட்
தேர்விலிருந்து விலக்களிக்க வகை செய்யும் மசோதா எனத் தமிழக
நலன்களையும் உரிமைகளையும் பாதுகாப்பதற்காக ஆட்சியாளர்கள்
எடுத்த முயற்சிகள் முழுமையானதா உளப்பூர்வமானதா என்பதைக்
கடந்து, மாநிலத்தின் நலன் கருதி தி.மு.கழகம் அவற்றை முழுமனதாக
ஆதரித்து, இந்த இயக்கம் எப்போதும் தமிழர்களின் பக்கம் இருந்து
பாதுகாக்கும் என்பதை உணர்த்தும்.
-
அதேநேரத்தில், ஆளுங்கட்சியின் குறைபாடுகளை, நிறைவேற்றாத
வாக்குறுதிகளை, மக்கள் விரோத, ஜனநாயகத்திற்கு எதிரான
நடவடிக்கைகளை எடுத்துக்கூறவும் தயங்கவில்லை.
ஆனால், அதற்கு சட்டப்பேரவைத் தலைவர் முழுமையான வாய்ப்புகளை
வழங்காமல், ஆளுங்கட்சியினரின் துதிபாடும் பேச்சுகளுக்கே அதிக
நேரத்தை ஒதுக்கித் தந்தார். அதிலும் ஆளுங்கட்சியினருக்கு வழங்கப்படும்
உரிமைகள் எதிர்க்கட்சியினருக்கு மறுக்கப்பட்டன.
முன்பு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அவரும் அவரது
அமைச்சரவையினரும் ஆளுங்கட்சி உறுப்பினர்களும் தமிழகத்தை
அதிக காலம் ஆட்சி செய்த முதல்வரான கருணாநிதியின் பெயர்
சொல்லி பல முறை பேசியிருக்கிறார்.
முன்னாள் முதல்வர்கள் பலர் இருப்பதால் இப்படிப் பெயர் சொல்லிக்
குறிப்பிடலாம் என சபாநாயகரும் அதற்கு அனுமதியளித்தார்.
இப்போது அதே வழியில், முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவின்
பெயரை நமது கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டபோது,
அதற்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
முன்னர் கடைப்பிடித்த நடைமுறைகளை நாம் சுட்டிக்காட்டிய போதும்
பேரவைத் தலைவர் சமாதானமடையவில்லை. நாளுக்கொரு விதி
ஆளுக்கொரு விதி முன்னாள் முதல்வர் கொடுத்த வாக்குறுதிகள்,
அறிவித்த திட்டங்கள், நடத்திய உலக முதலீட்டாளர் மாநாடு
உள்ளிட்டவை எந்தளவில் செயல்பாட்டில் உள்ளன என்பதையும்
மக்களுக்கு என்ன பலன் கிடைத்தது என்பதையும் தான் கழகத்தினர்
கேள்விகளாக எழுப்பினர்.
இந்தக் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்க முடியாத ஆளுங்கட்சியின்
அமைச்சர்கள், வரலாற்றுப் பெருமைமிக்க தமிழக சட்டமன்றத்தை
துதிபாடும் மன்றமாக மாற்றி, இந்தக் கூட்டத் தொடரை நிறைவு
செய்துள்ளனர்.
வர்தா புயலால் சென்னை மாநகரம் கடும் பாதிப்புக்குள்ளான நிலையில்,
அப்போது வீழ்ந்த மரங்களின் கழிவுகளை மாநகராட்சியின் பூங்காக்கள்-
விளையாட்டு திடல்கள் ஆகியவற்றில் கொட்டி வைத்திருப்பதை எப்போது
அகற்றி, மக்களுக்கும் இளைஞர்களுக்கும் அந்த இடங்கள் பயன்படும்படி
செய்யப் போகிறீர்கள் என்ற கேள்வியை எதிர்க்கட்சித் தலைவர் என்ற
முறையில் சட்டமன்றத்தில் எழுப்பினேன்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13986
மதிப்பீடுகள் : 1181
Re: துதிபாடும் மன்றமான சட்டப்பேரவை: ஸ்டாலின் விமர்சனம்
அதற்கு யார் பதிலளிப்பது, என்ன பதிலளிப்பது எனப் புரியாமல்
கல்வி அமைச்சரும் உள்ளாட்சித் துறை அமைச்சரும் திண்டாடிய
செய்தியை ஊடகங்கள் வாயிலாக உங்களில் பலரும் அறிந்திருக்கக்
கூடும்.
மக்களுக்கானத் திட்டங்கள் குறித்த ஆக்கப்பூர்வமான விவாதங்கள்
நடக்க வேண்டிய சட்டப்பேரவையை, அவையில் இல்லாதவர்களைப்
பற்றிப் புகழ்பாடும் மன்றமாக மாற்றிய விதிமீறல்களே நடந்து முடிந்த
கூட்டத் தொடரின் ‘பெருமை’களாக இருந்தன.
சின்னம்மா..சின்னம்மா என்கிற வார்த்தைகள் தான் ஆளுங்கட்சித்
தரப்பில் அதிகளவில் உச்சரிக்கப்பட்டன. மக்களின் அங்கீகாரம்
பெறாத-மக்களின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்படாத -
மக்களின் மன்றமான சட்டப்பேரவையில் இல்லாத ஒருவரைப் பற்றிப்
பேசலாமா என அவையின் மரபுகளையும் விதிகளையும் சுட்டிக்காட்டி
பேரவைத் தலைவரிடம் கழகத்தினர் கேள்வி எழுப்பிய போது,
"ஆளுங்கட்சியினர் தங்கள் கட்சியின் தலைமையைப் புகழ்ந்து
பேசுகிறார்கள். நீங்களும் வேண்டுமானால் உங்கள் தலைமையைப்
புகழ்ந்து கொள்ளுங்கள்" என்று புதிய 'துதிச் சலுகை' அறிவிப்பு
செய்கிறார் பேரவைத் தலைவர்.
நமது உயிருக்கு நிகரானத் தலைவரை எப்போதும் நம் நெஞ்சில் வைத்து
போற்றுகிறோம். பாராட்டுகிறோம். அந்தப் பாராட்டுகள், மக்கள் நலன்
பற்றிப் பேசக்கூடிய அவையின் நடவடிக்கைகளைத் திசை மாற்றுவதாக
இருக்கக் கூடாது.
அதனை, தோல்வியே காணாமல் 13 முறை சட்டமன்றத்திற்குத்
தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனையாளரான கருணாநிதியும் விரும்ப
மாட்டார்கள். அவருடைய வழிகாட்டுதலிலே உருவான நாம் ஒருபோதும்
இத்தகைய செயல்களில் ஈடுபட ஆர்வம் காட்ட மாட்டோம்.
அவருடைய சாதனைகளைப் பாராட்டிப் பேசியிருப்போமே தவிர, மக்கள்
பிரச்சினைகளைப் பேச வேண்டிய நேரத்தில் ஆலாபனை செய்து
கொண்டிருக்க மாட்டோம். இதை நான் பேரவையிலே சுட்டிக்காட்டிய
போதும் பயனில்லாமல் போய்விட்டது.
இன்னும் சொல்லப் போனால் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும்
தலைவர் கருணாநிதியையோ, என்னையோ புகழ வேண்டாம் என்று
கேட்டுக் கொண்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். அப்படி மீறி பேசிய
ஒரு சில கழக சட்டமன்ற உறுப்பினர்களேயே "நேரடியாக கேள்வியை
கேளுங்கள்" என்று நான் கடிந்து கொண்டதும் பத்திரிக்கைகளில்
செய்திகளாக வந்தது. அதையும் நீங்கள் படித்திருப்பீர்கள்.
தி.மு.க. இப்படித்தான் இந்த கூட்டத்தொடரில் மட்டுமல்ல எந்த கூட்டத்
தொடரிலும் சட்டமன்ற ஜனநாயகத்தை போற்றிப் பாதுகாத்து
வந்திருக்கிறது. கருணாநிதியின் வழிகாட்டுதலில் இனிமேலும் திமுக
ஆக்கப்பூர்வமாக ஜனநாயக மரபுகளைப் பின்பற்றிச் செயல்படும்"
இவ்வாறு ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.
--
----------------தி இந்து
கல்வி அமைச்சரும் உள்ளாட்சித் துறை அமைச்சரும் திண்டாடிய
செய்தியை ஊடகங்கள் வாயிலாக உங்களில் பலரும் அறிந்திருக்கக்
கூடும்.
மக்களுக்கானத் திட்டங்கள் குறித்த ஆக்கப்பூர்வமான விவாதங்கள்
நடக்க வேண்டிய சட்டப்பேரவையை, அவையில் இல்லாதவர்களைப்
பற்றிப் புகழ்பாடும் மன்றமாக மாற்றிய விதிமீறல்களே நடந்து முடிந்த
கூட்டத் தொடரின் ‘பெருமை’களாக இருந்தன.
சின்னம்மா..சின்னம்மா என்கிற வார்த்தைகள் தான் ஆளுங்கட்சித்
தரப்பில் அதிகளவில் உச்சரிக்கப்பட்டன. மக்களின் அங்கீகாரம்
பெறாத-மக்களின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்படாத -
மக்களின் மன்றமான சட்டப்பேரவையில் இல்லாத ஒருவரைப் பற்றிப்
பேசலாமா என அவையின் மரபுகளையும் விதிகளையும் சுட்டிக்காட்டி
பேரவைத் தலைவரிடம் கழகத்தினர் கேள்வி எழுப்பிய போது,
"ஆளுங்கட்சியினர் தங்கள் கட்சியின் தலைமையைப் புகழ்ந்து
பேசுகிறார்கள். நீங்களும் வேண்டுமானால் உங்கள் தலைமையைப்
புகழ்ந்து கொள்ளுங்கள்" என்று புதிய 'துதிச் சலுகை' அறிவிப்பு
செய்கிறார் பேரவைத் தலைவர்.
நமது உயிருக்கு நிகரானத் தலைவரை எப்போதும் நம் நெஞ்சில் வைத்து
போற்றுகிறோம். பாராட்டுகிறோம். அந்தப் பாராட்டுகள், மக்கள் நலன்
பற்றிப் பேசக்கூடிய அவையின் நடவடிக்கைகளைத் திசை மாற்றுவதாக
இருக்கக் கூடாது.
அதனை, தோல்வியே காணாமல் 13 முறை சட்டமன்றத்திற்குத்
தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனையாளரான கருணாநிதியும் விரும்ப
மாட்டார்கள். அவருடைய வழிகாட்டுதலிலே உருவான நாம் ஒருபோதும்
இத்தகைய செயல்களில் ஈடுபட ஆர்வம் காட்ட மாட்டோம்.
அவருடைய சாதனைகளைப் பாராட்டிப் பேசியிருப்போமே தவிர, மக்கள்
பிரச்சினைகளைப் பேச வேண்டிய நேரத்தில் ஆலாபனை செய்து
கொண்டிருக்க மாட்டோம். இதை நான் பேரவையிலே சுட்டிக்காட்டிய
போதும் பயனில்லாமல் போய்விட்டது.
இன்னும் சொல்லப் போனால் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும்
தலைவர் கருணாநிதியையோ, என்னையோ புகழ வேண்டாம் என்று
கேட்டுக் கொண்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். அப்படி மீறி பேசிய
ஒரு சில கழக சட்டமன்ற உறுப்பினர்களேயே "நேரடியாக கேள்வியை
கேளுங்கள்" என்று நான் கடிந்து கொண்டதும் பத்திரிக்கைகளில்
செய்திகளாக வந்தது. அதையும் நீங்கள் படித்திருப்பீர்கள்.
தி.மு.க. இப்படித்தான் இந்த கூட்டத்தொடரில் மட்டுமல்ல எந்த கூட்டத்
தொடரிலும் சட்டமன்ற ஜனநாயகத்தை போற்றிப் பாதுகாத்து
வந்திருக்கிறது. கருணாநிதியின் வழிகாட்டுதலில் இனிமேலும் திமுக
ஆக்கப்பூர்வமாக ஜனநாயக மரபுகளைப் பின்பற்றிச் செயல்படும்"
இவ்வாறு ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.
--
----------------தி இந்து
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13986
மதிப்பீடுகள் : 1181
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum